Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மணிரத்னத்தை நான் சந்திக்காமல் போயிருந்தால் இந்த இடம் கிடைத்திருக்காது! - ஏ ஆர் ரஹ்மான்
சென்னை: மணிரத்னத்தை மட்டும் நான் பார்க்காமல் போயிருந்தால் இன்று இப்படி ஒரு இடம் சினிமாவில் எனக்குக் கிடைத்திருக்காது என்றார் ஏ ஆர் ரஹ்மான்.
மணிரத்னம் இயக்கியுள்ள புதிய படமான காற்று வெளியிடையின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.
படத்தின் இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் பேசுகையில், "இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு புனிதமான அனுபவம். வைரமுத்து சாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
1992-ல் ரோஜா படத்தில் ஏஆர் ரஹ்மானும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு இந்த ஜோடி பிரியவே இல்லை. தொடர்ந்து 25 ஆண்டுகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. வெள்ளி விழா ஸ்பெஷலாக காற்று வெளியிடை வெளியாகியுள்ளது.