Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமெரிக்காவில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான்.. பொன்னியின் செல்வன் குறித்து போட்ட அடடே அப்டேட்!
Recommended Video
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் பட புகைப்படங்களை சமீபத்தில் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் அதுகுறித்த பதிவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லைகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
கல்கியின் நாவல்
அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமையாக திகழ்கிறது. இதனை சினிமாவாக எடுக்க பலரும் முயற்சித்து கடைசியில் கை விட்டனர். இயக்குநர் பாரதிராஜா கூட கமல், ஸ்ரீதேவி, ரேவதியை வைத்து பொன்னியின் செல்வனை இயக்க திட்டமிட்டு இருந்ததாக தற்போது கூறியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.
நட்சத்திரங்கள்
பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டிருக்கும். அதற்கு நேர்மை செய்யும் வகையில் நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பிரம்மாண்டமாக மணிரத்னம் இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஷெட்யூல்
தாய்லாந்து நாட்டில் உள்ள கோயில்கள், தீவுகள் என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
ரஹ்மான் ட்வீட்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் இருந்து பல படங்களில் அவருடன் இணைந்து இசையமைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் படத்திலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் ஒளிபதிவாளர் ரவி வர்மன் பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகளை காண்பித்தார். வேற லெவலில் இருக்கிறது என ரஹ்மான் போட்ட ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
|
தமிழின் காவியம்
ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் குறித்து போட்ட ட்வீட் மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகர், பொன்னியின் செல்வன் தமிழின் காவியம்.. உங்கள் இசை அதற்கு மேலும் உயிர் கொடுக்கும்
|
நாவல் படிக்கிறேன்
ரஹ்மானின் இந்த ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் போட்டுள்ள இந்த ரசிகர், தற்போது தான் பொன்னியின் செல்வன் நாவலை படித்து வருகிறேன். படத்தை விட நாவல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் உங்க இசைக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.