Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
AR Rahman: ஆஸ்கர் விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்த ரஹ்மான்: ஏன் தெரியுமா?
மும்பை: ஆஸ்கர் விருது விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்துள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. அவர் இரண்டு கையில் இரண்டு விருதுகளை வைத்துக் கொண்டு நின்றதை மறக்கத்தான் முடியுமா?
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கி 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாட மும்பை தாராவி பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுகள் பற்றி ரஹ்மான் கூறியிருப்பதாவது,
ஆஸ்கர்
ஆஸ்கர் விருதுகளை வாங்குவதற்கு முன்பு பதட்டமாக எல்லாம் இல்லை. விருது விழாவில் ஒல்லியாக ஷேப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக முதல் நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.
அங்கீகாரம்
ஹாலிவுட்டில் இருக்க ஆஸ்கர் விருது வாங்கியவர் என்ற அங்கீகாரம் கை கொடுத்தது. தற்போது எப்பொழுது என் பெயரை யாராவது ஹாலிவுட்டில் தெரிவித்தாலும் அவர்களுக்கு அது நான் தான் என்று தெரிகிறது.
ஊக்கம்
ஆஸ்கர் விருது, அங்கீகாரம் கிடைத்தது இசையை தாண்டி படங்களை தயாரிக்கவும் எனக்கு ஊக்கம் அளித்தது. கோல்டன் குளோப் விருது விழாவில் நான் பாலிவுட் நடிகர் அனில் கபூர் அருகே அமர்ந்திருந்தேன். எனக்கு அந்நேரம் பார்த்து தாகமாக இருந்தது. நான் போய் ஸ்பிரைட் வாங்கி வருகிறேன் என்று கூறி அனில் கிளம்பினார். அனில் சென்று ஸ்பிரைட் வாங்கி வருவதற்குள் நான் விருதை பெற்றுவிட்டேன் என்றார் ரஹ்மான்.
அனில் கபூர்
இதற்காக நான் ரஹ்மானை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். அவர் விருது வாங்குவதை பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் அவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருவதற்குள் விருதை வாங்கிவிட்டார் என்றார் அனில் கபூர்.