Don't Miss!
- News வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.. மனோ தங்கராஜ்
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு!
சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இது மணிரத்னத்தின் கனவுப் படமாகும்.
இந்த படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா என முன்னனி நடிகர்களின் பட்டாளமே நடிக்கிறது.
சாய் பல்லவியின் விராட பருவம் OTT ரிலிஸ் இல்லை - இயக்குனர் உறுதி
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கனவு திரைப்படம்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணி ரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இரண்டு பாகம்
இந்த திரைப்படம் பெரிய பொருட்செலவில் இந்தியா & வெளிநாடுகளில் படமாகப்பட்டு வருகிறது. 800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த வரலாற்று திரைப்படம் வெளிவரவுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
கொரோனா தொற்று
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளிவந்தன. அதுவும் இந்தியாவில் கொரோனா பரவலின் நிலவரம் பொறுத்தே படம் வெளியாகும் என தெரிவித்தனர்.
ரசிகர்கள் ஆர்வம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பொன்னியின் செல்வன் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் உடனான கலந்துரையாடலில், மணிரத்னம் திரைப்படத்தை கலை ரீதியாக சிறப்பாக கையாண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.