Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ
Recommended Video
சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. 'காற்று வெளியிடை' இசைக்காகவும், 'மாம்' படத்தின் பின்னணி இசைக்காகவும் விருது பெறுகிறார் ரஹ்மான்.
இரட்டை தேசிய விருது பெறும் இரட்டை ஆஸ்கர் நாயகனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, " 'காற்று வெளியிடை' படத்துக்கு இந்த தேசிய விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம். மணிரத்னம் சார் ரொம்ப ஸ்பெஷல் பெர்சன். அவர் ஒரு ஐடியா கடல்னு சொல்லலாம். அவர்கிட்ட எந்த ஐடியா கொடுத்தாலும் அதை நல்லா பயன்படுத்திக்குவார்."
Thank You, Jury members of the National Film Awards, Friends, Fans, Well-Wishers and Members of the Media https://t.co/CVQfYzZgEP
— A.R.Rahman (@arrahman) April 13, 2018
"என் அருமை அண்ணன், மென்டார், மணிரத்னம் அவர்களுக்கு என்னோட நன்றி. அப்புறம் 'காற்று வெளியிடை' மொத்த டீமுக்கும் நன்றி. கார்த்தி, பாடலாசிரியர் கார்க்கி, வைரமுத்து, பாடகர்கள், என் டீம் எல்லோருக்கும் நன்றி. எல்லாப்புகழும் இறைவனுக்கே." எனக் கூறியுள்ளார்.
மேலும், "மாம் படத்துக்காக ஶ்ரீதேவி சென்னைக்கு வந்து இசையமைக்கக் கேட்டாங்க. இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். நாட்டுக்கு இந்த நேரத்தில் இந்தப் படம் அவசியம்னு தோனிச்சு. அதனால் படம் பண்ணோம். இந்தப் படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். ஶ்ரீதேவியை ரொம்ப மிஸ் பண்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனத் தெரிவித்துள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்