Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் ‘அறந்தாங்கி’ நிஷா.. காரணம் தனுஷ்!
Recommended Video
சென்னை: மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் மீது தான் வருத்தத்தில் இருப்பதாக காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வரலட்சுமி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி விநோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அறந்தாங்கி நிஷா, படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் மீது தான் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினார்.
தனுஷ் தான் காரணம்:
"சின்னத்திரையில் இருந்த என்னை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் தனுஷ் தான். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
வருத்தம்:
இந்த படத்தில் நான் 2வது ஹீரோயினாக நடித்துள்ளேன். ஆனாலும் எனக்கு தனுஷுடன் ஒரு டூயட் பாடல் வைக்காதது வருத்தம் தான். சாய் பல்லவிக்கு ஒரு கறிக்கொழம்பு பாட்டு மாதிரி எனக்கொரு கோழிக்கொழம்பு பாட்டு வெச்சிருக்கலாம்.
நானும், சாய் பல்லவியும்:
சாய் பல்லவி ஒரு ஷார்டுக்கு கூட மேக்கப் போடவில்லை. நான் ஒரு ஷார்டுக்கு கூட மேக்கப் போடாமல் இருக்கவில்லை. நானும் அவரும் அமாவாசை, பெளர்ணமி மாதிரி இருக்கும்.
பாலாஜி மோகன்:
இயக்குனர் பாலாஜி மோகனை முதலில் பார்த்தபோது பால்வாடிக்கு முதல் நாள் வந்த குழந்தை மாதிரி இருந்தார். அவ்வளவு அமைதியானவர். யாருடைய மனமும் கோணாமல் எங்களை பார்த்துக்கொண்டார்", என அவர் கூறினார்.