Don't Miss!
- Finance Adani: விதிமுறைகள் மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- News ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக கோபமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.
பொள்ளாச்சியில் 200க்கும் அதிகமான பெண்களை மிரட்டி கும்பலொன்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புள்ள கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவும் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிஷா வீடியோ:
‘நாங்க பொம்பளையா பொறந்துட்டோம். போராடி பார்ப்போம்' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர், "இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள்.
மீண்டும் கள்ளிப்பால்:
இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டிய காலம் திரும்பி விடும். ஏனென்றால் 10 , 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவர்.
நீயெல்லாம் ஒரு தாயா?
குற்றவாளி ஒருவரின் தாய் அளித்த பேட்டியைப் பார்த்தேன். நீயெல்லாம் ஒரு தாயா..மூதேவி. செட்டப் செய்து அழுகின்ற குரலா அப்பெண்ணுடையது. பாதிப்பு, தவிப்பு, நம்பிக்கைத் துரோகம் என அந்தக் குரலில் உண்மையான பரிதவிப்பு உங்களுக்குத் தெரியவில்லையா?
இது தான் தீர்வு:
போராட்டங்கள் நடத்துவது இதற்கு தீர்வாகாது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒன்று சேர்பவர்கள் தங்களது எதிர்ப்பை வரும் தேர்தலில் காட்ட வேண்டும். தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
-
Thalaivar 171: ரோலக்ஸை விட தாறுமாறா இருக்கே.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? லோகேஷ் ட்வீட்!