Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா!
சென்னை: அறந்தாங்கி நிஷாவுக்கு பட்டி மன்றம் ஒன்றும் புதிதில்லை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற பட்டி மன்ற டாஸ்க்கில் பட்டைய கிளப்பினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தன.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் நேற்று சிறப்பு பட்டி மன்றம் நடத்தப்பட்டது. இதில் பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்றும் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்றும் தலைப்பு கொடுக்கப்பட்டது.
உங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ!
எதுகை மோனை
இதில் பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்ற தலைப்பில் பேசினார் அறந்தாங்கி நிஷா. அறிஞர் அண்ணாவின் வார்த்தையுடன் பட்டி மன்றத்தை தொடங்கிய நிஷா, கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும், குடும்பம்னா பிரச்சனை இருக்கும் என எதுகை மோனையில் பேசினார்.
செருப்பால அடிப்பங்க
தொடர்ந்து புறணி பேசுவது அழகு என்று கூறிய நிஷா, ஒருவருடைய உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போதுதான் அந்த புறணி அசிங்கம். அந்த புறணியை வெளியே இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க
மக்களுக்கு புரியும்
உனக்கு பிடித்தவரை பற்றி தப்பா பேசும் போது அதை பார்ப்பவன் திட்டுகிறான். குடும்பத்தில் சண்டை வேண்டும் போட்டி வேண்டும். சண்டையும் சந்தோஷமும் சேர்ந்ததுதான் குடும்பம் என்று மக்களுக்கு புரியும்.
சுகம்தான்
24 மணி நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தால் அவனுக்கு பெயர் இளிச்சவாயன். போபமும் இருக்கனும், அப்பப்ப வரனும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.
தாங்கிப்பிடிதற்கு கரம் இருந்தால் தடுக்கி விழுவதும் ஒரு சுகம் தான். தோள் கொடுப்பதற்கு தோழன் இருந்தால் தேம்பி அழுவதும் சுகம்தான்.
விட்டுக்கொடுக்காதீர்கள்
உணர்வுபூர்வமான வலி எடுக்கும்போது உடன் பிறந்தவன் இருந்தால் வலி கூட ஒரு சுகம்தான். ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போட்டி கூட ஒரு சுகம்தான்.
அன்பான குடும்பத்தில் இருந்து போட்டி போடுங்கள் ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களை விட்டுக்கொடுக்காதீர்கள்.. இவ்வாறு பேசி பொளந்து கட்டினார் அறந்தாங்கி நிஷா.