Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'அராத்து'
விஜய்யை வைத்து ‘ப்ரியமுடன்', ‘யூத்' போன்ற படங்களையும், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றிக் கொண்டு, அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் அராத்து.
அதென்ன அராத்து...? இயக்குநர் ஷெல்வா பேசுகையில், "உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்கத் திட்டமிட்டுளோம்.
அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து'.
படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி' புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து' கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் போட்டுள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்," என்றார்.