Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரவிந்த் சாமிக்கு ஒரு விருது.. லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா
சென்னை: கோவாவில் உலக சினிமா திரைப்பட விழா நடைப்பெற்றது. அந்த விழாவில்,நடிகர் அரவிந்த் சாமிக்கு லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா என்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் அவர்களும் கௌரவபடுத்தப்பட்டார்.
இந்திய உலக சினிமா திரைப்பட விழா 1952லே இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. பல நகரங்களில் இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது இவ்விழா கோவாவிலே நடைப்பெற்று வருகிறது .
இதில் நடிகர் அரவிந்த் சாமிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து மெல்லப்பேசி, முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி .கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே இளசுகளின் கனவு நாயகனானார். அதன்பின் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பிசியாக இருந்தார்.
என் உடல் ஓய்வை கேட்கிறது.. சினிமாவுக்கு முழுக்கு போடும் உச்ச நடிகர்? அதிர்ச்சியில் திரையுலகம்!
2006க்கு பிறகு அரவிந்த் சாமி படம் ஏதும் நடிக்கவில்லை ,அதையடுத்து 2013ல் கடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி இதுவும் சொல்லும்படியாக இல்லை. அதன் பின் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடித்தார்.
வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஒருவனாகவே நடித்து தனி முத்திரைப்பதித்தார் அரவிந்த்சாமி. ரீஎன்ட்ரினா இதுதான்டா என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இவருடைய வில்லன் என்டரி. தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் ஆடி வருகிறார்.