அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா? கலாய்யுடன் ஆட்டத்தை ஆரம்பித்த கமல்.. பளீச்சென பதில் சொன்ன அர்ச்சனா!
சென்னை: கடிகார டாஸ்க்கில் பாலாஜிக்கு முதில் கால் செய்ததற்கான காரணத்தை கமலிடம் பளீச் பளீச்சென போட்டுடைத்தார் அர்ச்சனா.
நேற்றைய எபிசோட் முழுக்க முழுக்க கடந்த வாரம் நடந்த நாமினேஷன் டாப்புள் கார்டு மற்றும் கால் செண்டர் டாஸ்க்குளை மையப்படுத்தியே இருந்தது.
டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்ததற்கான காரணத்தை கேட்ட கமல், கால் செண்டர் விஷயத்தில் கால் செய்தவர்கள் கேட்ட கேள்விக்கும் கால் செண்டர் ஊழியர்கள் அளித்த விளக்கம் குறித்தும் கேட்டார்.

ஏன் பாலாவுக்கு?
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அன்பு ஜெயிக்கும்னும் நம்புறீங்களான என அர்ச்சனா கேட்ட அதே ஆக்ரோஷத்தோடு அர்ச்சனாவிடம் கேட்டுவிட்டு பிரேக் சென்றார் கமல். பிரேக்குக்கு பின்னர் நிகழ்ச்சியை தொடங்கிய கமல், நீங்க எதுக்கு முதலில் பாலாவை தேர்வு செய்தீர்கள் என்றார்.

ரொம்ப காயப்படுத்தியது
அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா அன்றைக்கு முந்தைய நாள் நடைபெற்ற டாப்புள் கார்டு டாஸ்க்கில் நான் 3 பேரை முன்னிலைப்படுத்தி விளையாடுவதாக பாலாஜி கூறினார். மேலும் அன்பு என டிராமா பண்ணுவதாகவும் கூறினார். அது என்னை ரொம்ப காயப்படுத்தியது. அதில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகதான் கால் செய்தேன்.

எதுவும் மனதில் இல்லை
கேள்விகளை கேட்டேன் அதற்கு பாலாஜியும் பதில் சொன்னார். வெளியே வந்த பிறகு ஒரு சண்டை நடைபெற்றது. அதன் பிறகு நானும் எதுவும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை பாலாஜியும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. பிக்பாஸ் வீட்டில் யாரையும் முன்னிலைப்படுத்தி விளையாட முடியாது சார்.
Recommended Video

முடியல சார்
பாட்டி வேஷத்தை நான் நிஷாவுக்கு போட முடியாது, கடிகார டாஸ்க்கில் நான் எனக்கு பதிலாய் ரியோவை நிறுத்த முடியாது. திரும்ப திரும்ப நீ.. நீ என்று சொன்னால் முடியல சார் உடம்பு வலிக்குது என மற்றவர்கள் தங்களின் குரூப்பை பற்றி பேசுவது குறித்தும் கமல் தன்னிட்ம் கேள்வி கேட்டது குறித்தும் விளக்கம் கொடுத்தார் அர்ச்சனா.


Click it and Unblock the Notifications











