Don't Miss!
- News பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
வருமான வரித்துறை சம்மன்.. அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்.. விஜய் & அன்புச்செழியன் ஆடிட்டர்கள் ஆஜர்!
Recommended Video
சென்னை: வருமான வரித்துறை சம்மனை தொடர்ந்து ஏஜிஎஸ் சினிமாவின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனுக்கு அளித்த சம்மன் தொடர்பாக அவர்களது ஆடிட்டர்கள் இன்று வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தியன் 2 சண்டை காட்சி லீக்.. செம்ம டென்ஷனான ஷங்கர்.. சென்னை அருகே பிரம்மாண்ட செட்!
சிக்கிய அன்புச்செழியன்
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கமும், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை சோதனை முடிவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஏஜிஎஸ்சில் ரெய்டு
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களை தொடர்ந்து, பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை வேட்டை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை சென்றது.
ஷூட்டிங் பாதிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங், நெய்வேலி என்எல்சியில் நடைபெற்று வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்றதால், மாஸ்டர் படத்தின் அன்றைய ஷூட்டிங் பாதித்தது.
வருமான வரித்துறை சம்மன்
நடிகர் விஜய்யிடம் தொடர்ந்து இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய், அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. நடிகர் விஜய் நேரில் ஆஜராக கால அவகாசம் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அர்ச்சனா ஆஜர்
இந்நிலையில், இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி பிகில் படத்தின் வருமானம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.