உடைந்த முட்டை.. குற்றம்சாட்டிய அர்ச்சனா.. வீசியெறிந்த சோம்.. ரணகளமான பிக்பாஸ் வீடு.. பகீர் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் இன்றும் கோழிப்பண்ணை டாஸ்க்கே தொடருவது தெரிந்தது.
இதில் ஆரி அன்ஃபேராக விளையாடுகிறார் என்று அர்ச்சனா, ரம்யா, அனிதா ஆகியோர் அவரை ரவுண்டு கட்டினர்.

அர்ச்சனா கோழி
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவின் முட்டை உடைவதும் சோம் கோபப்படுவ்தும் காட்டப்பட்டுள்ளது. அதாவது, இரண்டாவது புரமோவில் அர்ச்சனா கோழியாக உள்ளார்.

படுத்து பாதுகாத்த அர்ச்சனா
அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள முட்டையை நரிகளின் கைகள் படாமல் பாதுகாக்கும் வகையில் முட்டையை கீழே வைத்து படுத்து கொள்கிறார். அப்போது அவரது முட்டையை தொட வரும் ரியோ அர்ச்சனா படுத்திருப்பதால் முட்டையை தொட முடியாமல் பின்வாங்குகிறார்.

உடைந்த முட்டை
இதனை கவனித்த சோம் நகரு நகரு என்று கூறி அர்ச்சனா பதுக்கி வைத்திருந்த முட்டையை தொட்டு விடுகிறார். அப்போது அர்ச்சனாவும் முட்டையை காப்பாற்ற முயற்சித்ததால் முட்டை நொறுங்கி போகிறது.

குற்றம்சாட்டிய அர்ச்சனா
நான் முட்டையை உடைக்கவில்லை, அவர் தான் உடைத்தார் என்று கூறி உடைந்த முட்டைகளுடன் பிக்பாஸிடம் சொல்கிறார் சோம். ஆனால் அதனை ஏற்காத அர்ச்சனா, நீதான் உடைத்தாய் என்கிறார்.

வீசியெறிந்த சோம்
அதற்கு லெஃப்ட் கையால் எப்படி உடைக்க முடியும் என்று கூறி கடுப்பாகும் சோம், கையில் வைத்திருந்த அர்ச்சனாவின் உடைந்த முட்டைகளை தூக்கி எறிகிறார். இதனால் கடுப்பாகும் அர்ச்சனா, என் படத்தை நீ இப்படி தூக்கி போடக்கூடாது என ஆக்ரோஷமாக கத்துகிறார்.

அன்பு நாடகம்
இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் பார்க்கவே பயங்கரமாக உள்ளதே என்றும் அர்ச்சனாவின் அன்பு நாடகம் நேற்று ரியோவிடம் வெளிப்பட்டது, இன்று சோமிடம் வெளிப்பட்டு விட்டது என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











