Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆரி எனக்கு கணவராகி.. குழந்தையெல்லாம் பொறந்து.. இங்கே பேரெல்லாம் வச்சோம்.. அர்ச்சனாவின் கதை எதுக்கோ?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நிஷாவுக்கும் அர்ச்சனாவுக்கும் நடந்த குழாய் அடி சண்டையை பற்றி பேசும் அர்ச்சனா ஆரி பற்றியும் பேசியுள்ளார்.
அன்சீனில் கூட சனம் ஷெட்டி பேசுவதை போடாமல், மீண்டும் அர்ச்சனாவையே காட்டி கடுப்பேத்துறீங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மறக்க முடியாத தருணங்கள்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் சுசித்ரா உள்ளிட்டோர் வந்துள்ளனர். மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொருத்தரும் கூறப் போகும் மொக்கை எபிசோடு தான் இன்று இருக்கும் என புரமோக்களை பார்த்தே நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.
அப்பாவை பார்த்துக்க முடியல
சினிமாவில் ஹீரோயினான பின்னர், அம்மாவுடனே அதிக நேரத்தை செலவழித்ததாகவும், அப்பாவை கண்டுக் கொள்ள முடியாமல் விட்டதால், ஒரு கட்டத்தில் அவர் உயிரே பிரிய நேரிட்டது. அதை இந்த வீட்டில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் என ரேகா கண்ணீர் சிந்தி அழும் காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம்பெற்று இருந்தன.
குழாயடி சண்டை
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில் அர்ச்சனா தனக்கு பிடித்த காட்சியை விவரிக்கும் சீன்கள் இடம்பெற்றுள்ளன. நிஷாவுடன் சேர்ந்து குழாயடி சண்டை போடும் காட்சியைத் தான் அர்ச்சனா விவரித்தார். அதை ஆரம்பத்தில் பார்த்த ரம்யா பாண்டியன் எல்லாம் பிடிக்காத மாதிரி ரியாக்ட் செய்தார் என்றார்.
கணவர் ஆரி
அந்த நாடகத்தில் எஸ்.ஐ. ஆக வந்த ஆரி அண்ணன் எனக்கு கணவராகி, எங்களுக்கு குழந்தையெல்லாம் பிறந்து இங்கே பேரெல்லாம் வச்சோம் மொத்த குடும்ப விளையாட்டையும் அரை மணி நேரத்துல டோட்டல் டேமேஜ் செய்த ரியோவுக்கு என் நன்றி என தனது கதையை முடிக்கிறார் அர்ச்சனா.
ஏன் அன்சீன் புரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது புரமோன்னு சொல்லியே போடலாமே, ஏன் அன்சீன் புரமோன்னு போடுறீங்க, எப்படியோ அர்ச்சனா பேசுறதையும், அன்பு கேங்கின் அட்டகாசங்களையும் தான் ஷோ ஃபுல்லா ஹைலைட் பண்ணி ரியோவுக்கும் சோமுக்கும் மைலேஜ் ஏத்த போறீங்கன்னு நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.