Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!
சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி!
தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி.
தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர்.
வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற படத்தை அவர் வெளியிடும் வரையில்.
இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி.
லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு, இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான்.
இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி.
அதைக் கேட்கவும் விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு, "லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!" என்று திருப்பிக் கேட்டுள்ளார்.
தமிழ் தமிழ் என வாய் கிழியப் பேசும், வர்த்தக ரீதியில் பெரிய கவிஞர்களாகப் பார்க்கப்படும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிதான் இனம் படத்துக்கு பாட்டெழுதினார். வைரமுத்து அந்தப் படத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.
அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க