நன்பேன் டா என்று சொல்லி தோள் கொடுக்க மனசு வேண்டும்
சென்னை: தீபாவளிக்கு ரிலீஸான கைதி படம் மிகபெரிய வெற்றி அடைந்தது .இதில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் பலரது பாராட்டை பெற்றார் .இதில் மற்றொரு வில்லனாக அம்சத் கானும் நடித்திருந்தார் .
அம்சத்கான் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவருமே நண்பர்கள், இவர்கள் இனைந்து பணியாற்றிய முதல் படம் கைதி தான் .இவர்கள் இருவருமே ஆரம்ப காலத்தில் ரேடியோ தொகுப்பாளர்களாக ரேடியோ ஒன் எப்.எமில் பணியாற்றியவர்கள் .

அங்கு வேறுவேறு நேரத்தில் இவர்கள் பணியாற்றி இருந்தாலும் அர்ஜுனின் குரல் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதுது .
அம்சத்கான் ரேடியோ ஒன்னில் பணியாற்றி கொண்டிருக்கும் போது வல்லினம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ,இதையடுத்து பல இடங்களில் வாய்ப்பு தேடி அழைந்த பின் மீண்டும் வேலைக்கே சென்ற அம்சத்கானுக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன் மூலம் புகைப்படம், மாயா,நட்பதிகாரம் 79,காலம்,ரம்,நெடுநல்வாடை ஆகிய படங்களில் நடித்தார் ,

இதையடுத்து 'இக்ளூ' என்ற ஜி தமிழின் இனையபடத்தில் கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் நடிகை இந்துஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்,இந்த படம் 'ஜி தமிழ்' இனைய பக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவர் விஜய் டீவியின் 'ஆயுத எழுத்து ' நெடுந்தொடரில் நடித்து வருகிறார் .இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .தற்போது கைதி படத்தின் மூலம் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் அர்ஜுன் தாஸ் ரேடியோ தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் ,அதற்கு பிறகு ரேன்டம் நம்பர்ஸ் என்ற குறும் படத்தில் நடித்திருந்தார் ,அது நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ,அவரது குரல் பலரையும் கவர்ந்தது ,இதையடுத்து கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் 'டார்க் மேன்' என்ற கதாபாத்திரத்துக்கு முண்ணோட்டத்தில் டப்பிங் செய்திருந்தார் ,யார் அந்த குரல் கொடுத்தவர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நேரத்தில் தற்போது உண்மையை ஒரு தனியார் ஊடக பேட்டியில் அர்ஜுன் தாஸ் கூறியிருக்கிறார் . அதற்கு பிறகு தற்போது கைதி படத்தில் நடித்தது மூலம் நல்ல பெயர் கிடைத்துள்ளது .இதையடுத்து அர்ஜுன் கும்கி 2 படத்தில் நடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











