“அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்”.. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்
நடிகை மலைகா அரோராவை இப்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: மலைகா அரோராவை திருமணம் செய்து கொள்வது குறித்து நடிகர் அர்ஜுன் கபூர் தனது தெளிவான முடிவை தெரிவித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்துள்ள பானிபட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
35 வயதாகும் அர்ஜுனும் 46 வயது நடிகை மலைகா அரோராவும் காதலித்து வருகின்றனர். உயிரே படத்தில் ஷாருக்கானுடன் 'தைய தைய தக தையா' என ஆட்டம் ஆடி நமக்கு அறிமுகமானவர் தான் இந்த மலைகா. கணவரை பிரிந்து வாழும் மலைகாவுக்கு, 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

கல்யாண கனவு
அர்ஜுனும், மலைகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது குறித்த தனது கனவை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார் மலைகா.

அவசரம் இல்லை
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள அர்ஜுன் கபூர், மலைகாவை இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசரம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "எங்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம். நேரம் வரும் போது நாங்களே சொல்கிறோம். எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்வோம்", என கூறியுள்ளார்.

மலைகா ஆசை
தனது திருமணம் கடற்கரை மணல் பரப்பில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் தான் நடைபெறும் என மலைகா ஆகாச கோட்டை கட்டி வரும் நிலையில் அர்ஜுனின் இந்த பேட்டி பாலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது.

60ம் கல்யாணம்
'கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்', என சோக கீதம் பாடும் நிலைக்கு மலைகாவை தள்ளப்போகிறார் அர்ஜுன் என கலாய்த்து வருகிறார்கள் பாலிவுட்காரர்கள். இப்போதே வயது கூடிக் கொண்டே போகிறது. இப்படியே போனால் 60ம் கல்யாணம் தான் என நெட்டிசன்களும் கலாய்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











