Don't Miss!
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதை எல்லாம் பார்க்க எங்க அம்மா இல்லையே: வாரிசு நடிகர் கவலை
மும்பை: என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்று நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்தார். முதல் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஸ்ரீதேவியுடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் கூறும்போது,
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி. அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. அவரின் மகள்களான ஜான்வி, குஷி என் தங்கைகள் கிடையாது.
ஜான்வி
ஜான்வி, குஷி ஆகியோரை நாங்கள் சந்தித்து பேசுவதே கிடையாது. அதனால் எங்களுக்குள் அண்ணன், தங்கை என்ற உறவு எதுவும் இல்லை. அவர்கள் என் தந்தையின் மகள்கள்.
அம்மா
எங்கள் தந்தை எங்களை விட்டுச் சென்ற பிறகு எனக்கும், என் தங்கை அன்ஷுலாவுக்கும் ஆதரவாக இருந்த அம்மாவும் இறந்துவிட்டார். என் தங்கை சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்.
வெற்றி
என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்றார் அர்ஜுன்.