Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நள்ளிரவு பார்ட்டியில் வாலிபரை காயப்படுத்திய பிரபல நடிகர் மீது புகார்
டெல்லி: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கேமராவை வீசியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள இரவு நேர கிளப்பில் நேற்று இரவு டிஜேவாக செயல்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் அர்ஜுனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதை பார்த்த அர்ஜுன் கோபம் அடைந்துள்ளார்.
கேமரா
அந்த புகைப்படக் கலைஞர் வைத்திருந்த கேமராவை பறித்து கூட்டத்தை நோக்கி வீசியுள்ளார் அர்ஜுன். இதில் கூட்டத்தில் இருந்த ஷோபித் என்பவரின் தலையில் கேமரா பட்டு அவர் காயம் அடைந்தார்.
|
அர்ஜுன்
நான் சனிக்கிழமை இரவு பார்ட்டிக்காக ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் அர்ஜுன் ராம்பல் டிஜேவாக இருந்தார். அவர் கூட்டத்தை நோக்கி கேமராவை வீசியதில் எனக்கு காயம் ஏற்பட்டது என்றார் ஷோபித்.
பவுன்சர்கள்
இந்த சம்பவம் இரவு 3.30 மணிக்கு நடந்தது. இது பற்றி அவரிடம் கேட்க சென்றால் அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தூக்கி வெளியே வீசிவிட்டார்கள் என ஷோபித் தெரிவித்தார்.
புகார்
போலீசில் அர்ஜுன் ராம்பல் மீது புகார் அளித்துள்ளேன். ஆனால் போலீசார் என் புகாரை கண்டுகொள்ளவில்லை, ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று ஷோபித் கூறினார்.