Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த பிரபல நடிகர்: காரணம்...
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் தனது மனைவி மெஹர் ஜெசியாவை பிரிந்துவிட்டார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும், அவரின் மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இருவரும் தனித்தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தாங்கள் பிரிவதாக இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
பிரிவு
அர்ஜுன் ராம்பல், மெஹர் ஜெசியாவுக்கு மஹிகா, மாயிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துள்ளனர். பிரிந்துவிட்டாலும் குழந்தைகளுக்கு எதுவாக இருந்தாலும் சேர்ந்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
சூசன்
அர்ஜுன் ராம்பலுக்கும், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் அவரின் திருமண வாழ்வில் பிரச்சனை துவங்கியது என்று முன்பு கூறப்பட்டது.
விவாகரத்து
அர்ஜுன் ராம்பலுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் சூசன் தனது கணவர் ரித்திக் ரோஷனை விவாகரத்து செய்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் விவாகரத்தான பிறகும் சூசன் ரித்திக்குடன் தான் வெளியே சென்று வருகிறார்.
அதிர்ச்சி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பார்ட்டி ஒன்றில் சூசனும், ராம்பலும் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க மெஹர் அழுது கொண்டே வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
முடியவில்லை
அர்ஜுன் ராம்பல், மெஹர் இடையேயான பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதானது. இருப்பினும் பிரச்சனையை சரி செய்ய முயன்றனர். அப்படியும் ஒன்றும் நடக்காததால் பிரிந்துவிட்டனர்.