அஜீத்துக்காக கதையுடன் முருகதாஸ் ரெடி: படத்தின் பெயர் 'தல'
சென்னை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அஜீத் குமாரை மனதில் வைத்து கதை ஒன்றை எழுதி வைத்துள்ளாராம்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய், சம்ந்தாவை வைத்து தீரன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது.
படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பாபு
முருகதாஸ் விஜய் படத்தை முடித்த பிறகு தெலுங்கில் முன்னணி ஹீரோவான மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜீத்
விஜய் படத்தில் பிசியாக இருக்கும் முருகதாஸ் அஜீத் குமாரை மனதில் வைத்து கதை ஒன்றை எழுதி வைத்துள்ளாராம். படத்திற்கு பெயர் கூட 'தல' என்று வைத்துள்ளாராம்.

தல
தீனா படம் மூலம் தான் முருகதாஸ் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் தான் அஜீத்தை தல, தல என்று அழைத்தார்கள். அதில் இருந்து அவருக்கு அந்த பெயர் நிலைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவர் கே.வி. ஆனந்த், ஷங்கர், விஷ்ணுவர்தன், வீரம் சிவா ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன்
அஜீத் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பம் படப்பிடிப்பின்போது காலில் அடிபட்டதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கிறார். முன்னதாக அவர் வீரம், கௌதம் மேனன் படங்களில் நடிப்பதற்காக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டுவிட்டார்.


Click it and Unblock the Notifications











