Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சட்டவிரோதமாக 41 பாட்டில் ஸ்காட்ச் வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம் கைது
மும்பை: சட்டவிரோதமாக 41 மது பாட்டில்கள் வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம் அர்மான் கோஹ்லியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிக் பாஸ் 7 இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகர் அர்மான் கோஹ்லி. அந்த நிகழ்ச்சியின்போது அவர் நடிகை கஜோலின் தங்கை தனிஷாவை காதலித்தார்.
இருவரும் சேர்ந்து பிக் பாஸ் வீட்டில் அடித்த லூட்டி ரொம்ப பிரபலம். கோபத்திற்கு பெயர் போனவர் அர்மான் கோஹ்லி. அவர் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் 41 பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.
ஒருவர் ஒரு மாதத்திற்கு மேல் 12 மது பாட்டில்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. வெளிநாட்டில் இருந்து ஒரு முறை ஒரு மது பாட்டில் மட்டமே கொண்டு வர சட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில் கோஹ்லி வீட்டில் 41 பாட்டில்கள் இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பை போலீசார் கணக்கிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக கோஹ்லியிடம் விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக அவர் தனது முன்னாள் காதலி நீரு ரந்தவாவை தாக்கி போலீசில் சிக்கினார்.
அந்த பெண் கோஹ்லி மீது போலீசில் புகார் அளிக்கவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.