Don't Miss!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- News ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி! வாரண்டியே கிடையாது! ஸ்டாலின் காட்டம்
- Sports ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே அதுதான்.. கொதித்த ரசிகர்கள்
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தால் காப்பாற்றப்பட்டேனா?: ஸ்டண்ட் சில்வா
சென்னை: தான் பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தின் உதவியால் நாடு திரும்பவில்லை என ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கி வரும் தல 57 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. தல 57 படக்குழு தற்போது பல்கேரியாவில் உள்ளது. இந்நிலையில் சில்வா மட்டும் நாடு திரும்பியுள்ளார்.
அவர் ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்ய நாடு திரும்பியுள்ளார்.
கைது
பல்கேரியாவில் சில்வா அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும், அஜீத் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அவரை வெளியே கொண்டு வந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
சில்வா
பல்கேரியாவில் கைது செய்யப்பட்டீர்களா என்று சில்வாவிடம் கேட்டால் சிரிப்பாய் சிரிக்கிறார். என்னை யாரும் கைது செய்யவில்லை, 2.0 பட வேலைக்காக நாடு திரும்பினேன் என்கிறார் சில்வா.
அஜீத்
ரஜினி சார் பட வேலை இருக்கிறது அதனால் ஊருக்கு போகிறேன் என அஜீத் சாரிடம் தெரிவித்துவிட்டு தான் வந்தேன். நான் கைது செய்யபட்டேன் என யார் வதந்தியை கிளப்பிவிட்டது என தெரியவில்லை. இதை கேட்டால் அஜீத்தே சிரிப்பார் என சில்வா தெரிவித்தார்.
வதந்தி
நான் ரஜினி சாருக்காக ஊருக்கு வந்தால் இங்கு என்னைப் பற்றி என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி வதந்தியை பரப்புகிறார்களோ என்று சில்வா கூறுகிறார்.