Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது: ஜி.வி. பிரகாஷ், சித்தார்த்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், சித்தார்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை வைத்து 200 பெண்களை மடக்கி அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரும் தாக்கப்பட்டிருக்கிறார். இதை பார்த்து பாதிக்கப்பட்ட பிற பெண்கள் எப்படி புகார் தெரிவிக்க முன் வருவார்கள்.
நெருங்கும் தேர்தல்: ரஜினி மாதிரியே முடிவு எடுத்த ஓவியா
|
ஜி.வி. பிரகாஷ்
அந்த மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..
#arrestpollachirapists என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களால் நடிகர் சித்தார்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி கிடைத்தால் தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். சமூக வலைதளங்களை வைத்து பெண்களை மடக்குவது அதிகரித்து வருகிறது. அதில் இருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். |
சித்தார்த்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களால் நடிகர் சித்தார்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி கிடைத்தால் தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். சமூக வலைதளங்களை வைத்து பெண்களை மடக்குவது அதிகரித்து வருகிறது. அதில் இருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.
|
பயங்கரம்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு நீதி தேவை. அந்த வீடியோவை பார்த்தேன். ஏன் யாரும் இது குறித்து பேசவில்லை என்று தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
அச்சம்
இந்த நெட்டிசனின் பயம் நியாயமானதே. திரையுலக பிரபலங்கள் மட்டும் அல்ல சாதாரண மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.