Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சுஷாந்த் வழக்கில் தொடரும் மர்மம்.. ரியாவை கைது செய்யுங்கள்.. டிரென்ட்டாகும் ஹேஷ்டேக்! #ArrestRhea
சென்னை: சுஷாந்த் மரணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரனா சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து கிட்டதட்ட 2 மாதங்கள் ஆகவுள்ளன. ஆனால் இன்னமும் அவரது மரண விவகாரத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக நாள்தோறும் ஒரு திடுக் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கை கையிலெடுத்துள்ள சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு.. பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
சுஷாந்த் கணக்கில் இருந்து
ஏற்கனவே சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சுஷாந்தின் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் ரியா சக்ரவர்த்தியின் கணக்குக்கு அனுப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வெளியிட்டனர்.
இன்று மீண்டும் ஆஜர்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ரியா சக்ரவர்த்தி அமலாக்கத்துறையில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுஷாந்த் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் நடிகை ரியா சக்ரவர்த்தி.
கிடுக்கிப்பிடி விசாரணை
ரியா சக்ரவர்த்தி மட்டுமின்றி அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, அவரது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி உட்பட ரியாவின் குடும்பமே அமலாக்கத்துறையின்அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சுஷாந்துடனான தொடர்பு மற்றும் பண பரி வர்த்தனைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் குற்றச்சாட்டு
ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு நடிகை ரியா சக்ரவர்த்தி, தனக்கு ஞாபகம் இல்லை என்றே பதில் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியா சக்ரவர்த்தி தான், சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என சுஷாந்தின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெருக்கமான போட்டோக்கள்
தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் அவர் நெருக்கமாக இருந்ததே சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு ரியா சக்ரவர்த்தி மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் பிரைவேட் போட்டோக்களையும் வைரலாக்கினர்.
தேசிய அளவில் ட்ரென்ட்டிங்
இதனிடையே ரியா சக்ரவர்த்தியை கைது செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் #ArrestRhea என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரென்டிங்கில் உள்ள நிலையில், ரியா பல முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.