Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
தனது சித்தி பாரதி தேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டி தலைமறைவாக இருந்தார் அஞ்சலி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் திரும்பி வந்தார். தற்போது ஹைதராபாத்திலேயே இருந்து வருகிறார். அவரும் அவரது சித்தியும் சமசரமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அஞ்சலி தன் மீது கூறியபுகார் அவதூறானது என்றும், பொயயான புகாரைக் கூறிய அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கோரி இயக்குநர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 177வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு அஞ்சலி வரவில்லை. இதையடுத்து கடந்த 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி.
இதையடுத்து அஞ்சலியின் வழக்கறிஞர் முருகன் ஒரு மனு செய்தார். அதில், அஞ்தசலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இதை ஏற்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும், வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.