Don't Miss!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு கைது வாரண்ட்!
ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்மபத்தினி, இது தாண்டா போலீஸ், பாடும் வானம்பாடி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜீவிதா. தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்தார். தனது கணவருடன் பல படங்களை சொந்தமாக தயாரித்து வந்தார்.
நடிகை ஜீவிதா ஆந்திர மாநிலம் நந்தியாலாவைச் சேர்ந்த பி.வி.ஜெகதீஷ்குமார் என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். கடனை அடைக்க அவருக்கு 2 ‘செக்' கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அந்த செக் திரும்பி விட்டது.
இதையடுத்து ஜெகதீஷ்குமார் நந்தியாலா முதல்நிலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜீவிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
2015-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜீவிதாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் ஜீவிதாவைக் கைது செய்ய வாரண்டு பிறப்பித்து நீதிபதி ராமமோகன் உத்தரவிட்டார்.