twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடி ஆணை!

    By Shankar
    |

    ஹைதராபாத்: நடிகர் டாக்டர் ராஜசேகர் மனைவியும் நடிகையுமான ஜீவிதாவுக்கு செக் மோசடி வழக்கில் பிடி ஆணை பிறப்பித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.

    நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் ரூ.34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக் கொடுப்பதாக கூறிய ஜீவிதா, சொன்னபடி பணத்தைக் கொடுக்கவில்லை.

    Arrest warrent for actress Jeevitha

    அவர் ஏற்கனவே கொடுத்த 'செக்'கை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் 2 முறை நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியும் ஜீவிதா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் கோர்ட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜூபிலி ஹில்ஸ் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    Hyderabad court has ordered to arrest actress Jeevitha in cheque bounce case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X