Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
என்னையும் கைது பண்ணுங்க...சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கிய ஓவியா
சென்னை : விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியாவிற்கு , அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. கவர்ச்சிக்கு மாறியும் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக்பாசிலும் தற்கொலை முயற்சி செய்து பரபரப்பை கிளப்பினார். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி மட்டுமல்ல, ஓவியாவின் புகழும் உச்சிக்கு செ்ன்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒவியா ஆர்மி துவங்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் பெருகியது.
அதற்கு பிறகும் அவர் நடித்த படங்கள் சர்ச்சையில் தான் முடிந்தன. படங்கள் மட்டுமல்ல அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து பதிவிட்டு, சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கோலிவுட்டின் கங்கனா என வர்ணிக்கும் அளவிற்கு சர்ச்சையாகி விட்டார் ஓவியா.
பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கோ பேக் மோடி ஹாஷ்டேக் உருவாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதனால் பாஜக.,வினர் ஓவியா மீது போலீசில் புகார், கோர்ட்டில் வழக்கு என போடும் அளவிற்கு போயினர். அந்த விவகாரம் முடிவதற்குள் மற்றொரு ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.ஓவியா தனது லேட்டஸ்ட் ட்வீட்டில், இது டெமாகிரசியா அல்லது டெமோகிரேசியா என கேட்டதுடன் அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்துள்ளார். இந்த அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக், பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும். இதில் பிரதமரை கடுமையாக விமர்சித்தும், கேள்விகள் கேட்டும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹாஷ்டாக்கின் கீழ் தான் ஓவியாவும் ட்வீட் செய்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதிவு சர்ச்சை, பரபரப்பை கிளப்பியதுடன் வைரலாகவும் ஆகிய வருகிறது. இதுவரை 8700 க்கும் அதிகமானவர் இதை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் ரீட்வீட் வேறு செய்து வருகிறார்கள். கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!