Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே மாரடைப்பால் உயிரிழந்த கலை இயக்குனர்
சென்னை: பிரபல கலை இயக்குனர் பாலா மாரடைப்பால் உயிரிழந்தார்.
திரைப்படம் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உடல்நலக் குறைவால் மரணமடைவது அதிகரித்து வருகிறது.
அதிக நேரம் பணியாற்றுதல், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான வேலைப்பளுவால் படத்தொகுப்பாளர் கிஷோர் இளம் வயதில் இறந்தது நினைவிருக்கலாம்.
இப்போது வளர்ந்து வரும் கலை இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெய்வேலியைச் சேர்ந்த பாலா சென்னையில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 29ஆம் தேதி தான் 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளே மாரடைப்பால் மரணித்துள்ளார் பாலா. அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு மற்றும் சில நடன நிகழ்ச்சிகளிலும் கலை இயக்குனராக பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது.
ஒரு சில திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய கலை இயக்குனராக சினிமாவில் வர வேண்டும் என்று லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.