Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே மாரடைப்பால் உயிரிழந்த கலை இயக்குனர்
சென்னை: பிரபல கலை இயக்குனர் பாலா மாரடைப்பால் உயிரிழந்தார்.
திரைப்படம் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உடல்நலக் குறைவால் மரணமடைவது அதிகரித்து வருகிறது.
அதிக நேரம் பணியாற்றுதல், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான வேலைப்பளுவால் படத்தொகுப்பாளர் கிஷோர் இளம் வயதில் இறந்தது நினைவிருக்கலாம்.
இப்போது வளர்ந்து வரும் கலை இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெய்வேலியைச் சேர்ந்த பாலா சென்னையில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 29ஆம் தேதி தான் 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளே மாரடைப்பால் மரணித்துள்ளார் பாலா. அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு மற்றும் சில நடன நிகழ்ச்சிகளிலும் கலை இயக்குனராக பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது.
ஒரு சில திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய கலை இயக்குனராக சினிமாவில் வர வேண்டும் என்று லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.