1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு ஓவியர்களின் முதல் மரியாதை!
உலகில் யாரும் செய்யாத பெரும் சாதனையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளைராஜாவுக்கு 100 ஓவியர்கள் இணைந்து முதல் மரியாதை செய்கின்றனர்.
இந்த 100 ஓவியர்களும் இணைந்து வரையும் ஓவியப் போட்டி வருகிற மார்ச் 12-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30மணிக்கு லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த விழாவின் தனிச் சிறப்பு, இசைஞானி இளையராஜாவின் 'Nothing but wind' ஆல்பத்தை ஓவியங்களைாக வரையவிருக்கிறார்கள் இந்த 100 ஓவியர்களும்.
விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் ,இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், வரைகலை கல்லூரி மாணவர்களான, இயக்குநர் கதிர், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











