Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பைக் மீது லாரி மோதி.. இளம் இயக்குனர் பரிதாப பலி.. ஷங்கரிடம் பணியாற்றியவர்.. திரையுலகம் அதிர்ச்சி!
கோவை: பைக் மீது லாரி மோதியதில் இளம் இயக்குனர் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள படம், 4G. காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதிஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.வேல்ராஜ் இசை அமைத்த இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.
அது எதுவும் இல்லை.. வெறும் பிட்டுத்துணிதான்.. முழுவதையும் காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
வெங்கட் பக்கர்
படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதை வெங்கட் பக்கர் இயக்கியுள்ளார். இவரது ஒரிஜினல் பெயர் அருண் பிரசாத். படத்துக்காக வெங்கட் பக்கர் என்று மாற்றி வைத்துள்ளார். கோயமுத்தூர் அருகில் உள்ள அன்னூரைச் சேர்ந்த இவர், லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.
மோதியது
இன்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் அருண் பிரசாத் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய இயக்குனர்
இளம் இயக்குனர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பது சினிமா துறையினரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அருண் பிரசாத், கலைஞர் டிவியில் வெளியான, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். பிறகு இயக்குனர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். அதற்குப் பிறகு 4 ஜி படத்தை இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
ராட்சசன் இயக்குனர்
என்றாலும் அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது என்று அவரது சினிமா வட்டார நண்பர்கள் தெரிவித்துள்ளனர். முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களின் இயக்குனர் ராம்குமார், கூறும்போது, 'இப்போது அன்னூரில் உள்ள அவரது வீட்டுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நாங்கள் பங்குபெற்றபோது, அந்த செஷனின் சிறந்த ஷார்ட் பிலிம்கான விருதை நானும் அருண் பிரசாத்தும்தான் வாங்கினோம்.
ரிலீஸ் ஆகியிருந்தால்
நான், அருண்பிரசாத், மரகத நாணயம் இயக்குனர் இயக்குனர் சரவணன், அயலான் இயக்குனர் ரவிகுமார் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிக நட்புடன் இருந்தோம். லாக்டவுனுகாக அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்த நேரத்தில் இப்படியாகி விட்டது, வருத்தமாக இருக்கிறது. அவர் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் வேற மாதிரி ஆகியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்