நடிகரின் தந்தை படுகொலை: பங்குச் சந்தை புரோக்கர் கைது

இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான விஜய் பாலந்தே என்பவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல உதவி செய்ததாக கவுதம் வோராவை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் டிக்கு மும்பை ஓஷிவாராவில் உள்ள அவரது மகனின் வீட்டு பாத்ரூமில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார் பாலந்தே.
போலீஸ் காவலில் இருந்த அவர் ஏப்ரல் 10-ம் தேதி சினிமாவில் வருவதைப் போல, போலீஸ் ஜீப்பிலிருந்து குதித்து தப்பி ஓடினார். பின்னர் நேராக அவர் அணுகியது வோராவைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications