Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்... நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்
சென்னை: அருண் விஜய் நடித்திருக்கும் சினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் அவருடன் பணியாற்றிய நபர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நடித்துள்ள காளி வெங்கட் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார்.
8 தோட்டாக்கள் இயக்குநருக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் அந்த பிரபல நடிகையா? வாழ்த்தும் பிரபலங்கள்!
ஜி.என்.ஆர்.குமரவேலன்
கல்யாணராமன், மீண்டும் கோகிலா, மகராசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஜி.என்.ரங்கராஜன் அவர்களின் மகன்தான் ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன்பிறகு ஹரிதாஸ் படம் மூலம் பிரபலமானார். கடைசியாக நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து வாகா படத்தை இயக்கினார். தற்சமயம் சினம் படத்தை இயக்கியிருக்கிறார்.
அருண் விஜய் தயாரிப்பு
2022-ஆம் ஆண்டில் ஓ மை டாக், யானை ஆகிய இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது. இப்போது சினம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் குற்றம் 23 மற்றும் தமிழ் ராக்கர்ஸ் ப்ராஜெக்ட்டுகளில் அவரை இயக்கியிருக்கும் அறிவழகன் இயக்கத்தில் உருவான பார்டர் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் சினம் திரைப்படத்தின் கதையை கேட்டதும் தானே அதனை தயாரித்துள்ளார். குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
லாக் டவுன் கடன்
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் காளி வெங்கட். கடந்த இரண்டு ஆண்டுகள் லாக்டவுன் இருந்தபோது பல கமிட்மெண்ட்டுகளால் பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் வெளியில் கடன் வாங்க ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் கடன் கொடுப்பவருக்கே காசு இல்லாத நிலைமை ஏற்பட்டதாகவும் கடன் அதிகரித்த நிலையில் அப்போதுதான் ஒரு நாள் காலை சினம் படத்திற்காக தனக்கு நடிகர் விஜயகுமார் முன்பணம் போட்டதாகவும் அந்த முன் பணத்தை வைத்தே தன்னுடைய மொத்த கடனையும் அடைத்து மீதமான பணத்தை சேமித்து வைத்துக் கொண்டதாகவும் காளி வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார்.
சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க
மற்ற துறையில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை. ஆனால் சினிமாக்காரர்களுக்கு சுடுகாட்டில் படப்பிடிப்பு நடந்த போது அங்கேயே அமர்ந்து உண்ணக்கூடிய வாய்ப்பு அமையும். சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்ததால் அங்குள்ளவர்கள் தனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் ஷூட்டிங்கின்போது தன்னிடம் வந்து அண்ணே சூட்டிங் எப்ப முடியும் என்று அவர்கள் கேட்க ஏனென்று நான் கேட்க வெளியில மூணு பீசு எரிவதற்காக வெயிட்டிங்ல இருக்கு என்று நகைச்சுவையாக கூறினார்களாம். அது மட்டுமின்றி சூட்டிங் முடிந்து கிளம்பும் வேளையில், அண்ணே நேரம் கிடைச்சா சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க என்று தன்னை அழைத்ததாக நகைச்சுவையாக கூறியுள்ளார். உண்மையாகவே அதன்பின்னர் ஒருநாள் அந்த சுடுகாட்டிற்கு சென்று அவர்களை பார்த்ததாகவும் அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்கள் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டதாகவும் காளி வெங்கட் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.