அருண் விஜய்யின் மாமனார்...தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் காலமானார்
சென்னை. ரெட்டைச்சுழி, ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய டைரக்டர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இயக்குனர் தாமிராவின் மறைவு திரையுலகினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் சென்னையில் இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அருண்விஜய் நடித்த வா, மாஞ்சா வேலு, தடையர தாக்க, மலைமலை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். இவருக்கு சுசில் என்ற மனைவியும், ஹேமந்த் என்ற மகனும், ஆர்த்தி அருண்விஜய் என்ற மகளும் உள்ளனர்.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











