Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அருண் விஜய்யின் மாமனார்...தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் காலமானார்
சென்னை. ரெட்டைச்சுழி, ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய டைரக்டர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இயக்குனர் தாமிராவின் மறைவு திரையுலகினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் சென்னையில் இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அருண்விஜய் நடித்த வா, மாஞ்சா வேலு, தடையர தாக்க, மலைமலை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். இவருக்கு சுசில் என்ற மனைவியும், ஹேமந்த் என்ற மகனும், ஆர்த்தி அருண்விஜய் என்ற மகளும் உள்ளனர்.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.