Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடேங்கப்பா.. ஆள் உயரத்துக்கு இருக்கே..அருண் விஜயின் செல்ல நாய் ருத்ரா!
சென்னை : சினம், பாக்சர், அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் அருண்விஜய்.
குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அறிவழகன் உடன் இணைந்து நடித்துவரும் படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா ஜோடியாக நடித்து வருகிறார்.
விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்த சின்னத்திரை நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
இந்த நிலையில் தொடர் படப்பிடிப்பு காரணமாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்தவுடனேயே செல்ல நாய் ருத்ரா உடன் கட்டி அனைத்து அன்பைப் பொழியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கை நிறைய படங்களுடன்
என்னை அறிந்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்த அருண் விஜய்க்கு வாழ்க்கையே திருப்பிப் போட்ட மாதிரி இப்பொழுது எக்கச்சக்கமான படங்களில் கதாநாயகனாக நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம் என இவர் நடித்து அடுத்தடுத்து திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெற கை நிறைய படங்களுடன் இப்போது நடித்து வருகிறார்.
பிரியா பவானி சங்கர்
அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் வழக்கம்போல நடைபெற்று வருகிறது இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் ஏற்கனவே மாஃபியா திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
33வது திரைப்படமாகும்
குற்றம் 23 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் நடித்து வரும் படம் பாக்ஸிங்கை மையமாகக் கொண்டு இருக்க இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த படம் அருண் விஜய்க்கு 33வது திரைப்படமாகும்.
பாசத்தை பொழிந்த
சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் மற்றும் பெயரிடப்படாத திரைப்படங்கள் என தொடர்ந்து படு பிசியாக நடித்து வரும் அருண் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பி இருக்க வீட்டில் வளர்த்து வரும் செல்ல நாய் ருத்ரா இவரைப் பார்த்தவுடனேயே ஓடி வந்து கட்டி அணைத்த பாசத்தை பொழிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன நாயா இல்ல டைனோசரா என கேட்டு வருகின்றனர்.