Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தட்டி தூக்குது அருண் விஜய்யின் ‘யானை‘… மூன்று நாள் வசூல்.. இத்தனை கோடியா?
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்திற்கு நேர்மையான விமர்சனம் கிடைத்து வருவதால், படம் வெளியான 3 நாட்களில் வசூலை தட்டித்தூக்கி உள்ளது.
பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு யானை படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து, தடம், மாஃபியா போன்ற திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கனகச்சிதமான நடிப்பு
மாஃபியா படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் யானை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்னத்தான் யானை படத்தில் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடிப்பது பிடித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பிறகும் வில்லனாக தொடர்ந்து நடிப்பேன் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
யானை படத்தின் ஒன் லைன்
இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை... நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.
Recommended Video
தட்டித்தூக்கும் வசூல்
ஜூலை 1ந் தேதி வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 5 கோடி வசூலாகி உள்ளது. அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி வசூலானது. வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் மேலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 5.5கோடியும், தமிழ் நாட்டில் மட்டும் 4.5 கோடி வசூலாகி படம் வெளியான 3 நாளில் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து இருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.