Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்... போட்டோவுடன் வெளியானது சூப்பர் அப்டேட்!
சென்னை : நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படமாக உருவாகி வருகிறது யானை.
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் குடும்ப பின்னணியில் ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகி வருகிறது.
சென்ற வாரம் நடிகை ராதிகா தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் முடித்ததைத் தொடர்ந்து இப்பொழுது அருண் விஜய் யானை படத்தின் டப்பிங்கை துவங்கியுள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு விக்கி மற்றும் கத்ரீனா எங்கே போக போறாங்க தெரியுமா?
குடும்ப பின்னணியில்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் இப்போது குடும்ப பின்னணியில் ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகி வருகிறது யானை. சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குனர் ஹரி அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் இந்தப்படம் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம்
அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி மிக நெருங்கிய உறவுக்காரர்களாகவே இருந்தாலும் இன்று வரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக யானை படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கிராமத்து கதை களத்தில் குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் யானை படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அந்த வகையில் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகிபாபு, கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு,போஸ் வெங்கட், சஞ்சீவி,தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, குக் வித் கோமாளி புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யானை
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டப்பிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்ற வாரம் நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.
டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்பொழுது அருண் விஜய் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக்கொண்டே எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.