Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சினம் படத்திற்காக முதன் முதலில் இந்தக் காரியத்தை செய்துள்ள அருண் விஜய்... என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் அருண் விஜய் தயாரித்து நடித்துள்ள சினம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
மக்கள் மத்தியில் டீசன்ட்டானா திரைப்படம் என்ற பெயரை இந்தத் திரைப்படத்திற்கு பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
சினம் படத்திற்காக முதன் முறையாக தனது கரியரில் அருண் விஜய் ஒரு காரியத்தை செய்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்தினால் நடிகர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும்: விக்ரம் வெற்றி விழாவில் கமல்
ஜி.என்.ஆர்.குமரவேலன்
பிரித்விராஜ் பிரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும், கிஷோர் நடித்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்ற ஹரிதாஸ், விக்ரம் பிரபு நடித்த வாகா போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் சினம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் போலீஸ் அதிகாரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி சினம் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
கிரைம் திரில்லர்
கிரைம் திரில்லர் ஜானரியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் திரையரங்கில்தான் படத்தை வெளியிடுவேன் என்று அருண் விஜய் விளக்கமளித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லாக் டவுன் காரணமாக படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிக் கொண்டே போனது. கிட்டத்தட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து இன்று தான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அருண் விஜய் தயாரிப்பு
இயக்குநர் குமரவேலன் முதல் முறை கதையை சொன்னவுடன் அது பிடித்துப் போகவே தானாகவே இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார் அருண் விஜய். ஓ மை டாக், யானை ஆகிய இரண்டு படங்களுக்கு பின்னர் மூன்றாவதாக இந்த ஆண்டு அருண் விஜய்க்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதனை தவிர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
சொல்லடி என் கண்மணி
படத்தை தயாரித்து நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடியுள்ளார் அருண் விஜய். சொல்லடி என் கண்மணி என்று துவங்குகின்ற அந்த பாடல் தான் அருண் விஜய் பாடுகின்ற முதல் பாடல். பாடுவது போலும் அல்லாமல் பேசுவது போலும் அல்லாமல் பாடலின் இசைக்கு ஏற்ப எமோஷனலான வசனங்களை மெட்டுக்கு பேசியுள்ளார் என்றே கூறலாம். பாடலின் பின்னணியில் போலீஸ் சைரன் சத்தம் காதுகளுக்கு இனிமையாக அமைந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் திரையரங்கில் கருத்து கூறும்போது பின்னணி இசையை பாராட்டிப் பேசுவதை பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக அருண் விஜய் இந்த ஆண்டு நல்ல படைப்புகளை கொடுத்து வருகிறார்.