twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினம் படத்திற்காக முதன் முதலில் இந்தக் காரியத்தை செய்துள்ள அருண் விஜய்... என்ன தெரியுமா?

    |

    சென்னை: நடிகர் அருண் விஜய் தயாரித்து நடித்துள்ள சினம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    மக்கள் மத்தியில் டீசன்ட்டானா திரைப்படம் என்ற பெயரை இந்தத் திரைப்படத்திற்கு பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

    சினம் படத்திற்காக முதன் முறையாக தனது கரியரில் அருண் விஜய் ஒரு காரியத்தை செய்துள்ளார்.

    ரசிகர்கள் வாழ்த்தினால் நடிகர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும்: விக்ரம் வெற்றி விழாவில் கமல்ரசிகர்கள் வாழ்த்தினால் நடிகர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும்: விக்ரம் வெற்றி விழாவில் கமல்

    ஜி.என்.ஆர்.குமரவேலன்

    ஜி.என்.ஆர்.குமரவேலன்

    பிரித்விராஜ் பிரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும், கிஷோர் நடித்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்ற ஹரிதாஸ், விக்ரம் பிரபு நடித்த வாகா போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் சினம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் போலீஸ் அதிகாரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி சினம் திரைப்படத்தை எடுத்துள்ளார்.

    கிரைம் திரில்லர்

    கிரைம் திரில்லர்

    கிரைம் திரில்லர் ஜானரியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் திரையரங்கில்தான் படத்தை வெளியிடுவேன் என்று அருண் விஜய் விளக்கமளித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லாக் டவுன் காரணமாக படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிக் கொண்டே போனது. கிட்டத்தட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து இன்று தான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    அருண் விஜய் தயாரிப்பு

    அருண் விஜய் தயாரிப்பு

    இயக்குநர் குமரவேலன் முதல் முறை கதையை சொன்னவுடன் அது பிடித்துப் போகவே தானாகவே இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார் அருண் விஜய். ஓ மை டாக், யானை ஆகிய இரண்டு படங்களுக்கு பின்னர் மூன்றாவதாக இந்த ஆண்டு அருண் விஜய்க்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதனை தவிர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

    சொல்லடி என் கண்மணி

    சொல்லடி என் கண்மணி

    படத்தை தயாரித்து நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடியுள்ளார் அருண் விஜய். சொல்லடி என் கண்மணி என்று துவங்குகின்ற அந்த பாடல் தான் அருண் விஜய் பாடுகின்ற முதல் பாடல். பாடுவது போலும் அல்லாமல் பேசுவது போலும் அல்லாமல் பாடலின் இசைக்கு ஏற்ப எமோஷனலான வசனங்களை மெட்டுக்கு பேசியுள்ளார் என்றே கூறலாம். பாடலின் பின்னணியில் போலீஸ் சைரன் சத்தம் காதுகளுக்கு இனிமையாக அமைந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் திரையரங்கில் கருத்து கூறும்போது பின்னணி இசையை பாராட்டிப் பேசுவதை பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக அருண் விஜய் இந்த ஆண்டு நல்ல படைப்புகளை கொடுத்து வருகிறார்.

    English summary
    Arun Vijay who has done this for the first time for Sinam Movie, Do you know what?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X