Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நினைத்ததை விட மாஃபியா சூப்பரா வந்துருக்கு .. படம் நிச்சயம் வெற்றி.. அருண்விஜய் நம்பிக்கை !
சென்னை : நான் நினைத்ததை விட மாஃபியா சூப்பரா வந்து இருப்பதாக நடிகர் அருண்விஜய் கூறினார்.
நடிகர் அருண்விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு திடமான ஹீரோவாக வளர்ந்து உள்ளார். இவரின் கதை தேர்வுகளும் படங்களும் தொடர்ந்து பாராட்டபட்டு வருகிறது. அப்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கபடும் படமான மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது .
இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இதற்கு முன் துருவங்கள் பதினாறு மற்றும் நரகாசூரன் படங்களை இயக்கியுள்ளார். இதில் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை நரகாசூரன் படம் வெளியாகவில்லை .
கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு படமே எனக்கு மிகவும் பிடித்த படம் , அவர் கதை சொல்ல வரும் போதே புதிதாக பல விசயங்களுடன் தான் வந்திருப்பார் என எதிர்பார்த்தேன் அதே போல தான் கதை இருந்தது என மாஃபியா பட விளம்பரங்களின் போது அருண்விஜய் கூறினார் .
மேலும் கார்த்திக் நரேன் ஒரு ரசிகரை போல படம் எடுக்கும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆனதும் கைதட்டி கத்தி சூப்பர் என்று கூறுவார் என அருண்விஜய் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் தேவையில்லாத ஒரு காட்சி கூட படமாக்கபட வில்லை. கதையில் என்ன இருந்ததோ அதை தான் எடுத்து இருக்கிறார் கார்த்திக் நரேன் கூறினார் அருண்விஜய் . மேலும், நான் நினைத்ததை விட மாஃபியா 2 மடங்கு நல்ல சூப்பரா வந்து இருக்கு நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் அருண்விஜய் பல நாட்களாக வீட்டுக்கு தெரியாமல் பைக் ஸ்டென்ட் கற்று வந்தாராம். அவரின் அப்பா இது ஆபத்து என்று தடுத்ததால் அவர் வீட்டுக்கு தெரியாமல் பைக் ஸ்டென்ட் கற்றாராம் .மேலும் அது வீட்டுக்கு தெரிந்த பிறகு இப்போது தான் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அதிகரித்து விட்டது இப்போது எதற்கு பைக் ஸ்டென்ட் என்று எல்லாம் கண்டித்ததும் அதை விட்டுவிட்டாராம் அருண்விஜய் .
அருண்விஜய் அடுத்ததாக அக்னிசிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் வடஆசிய நாடுகளிலும் நடந்து முடிந்துள்ளது. வரவிருக்கும்அருண்விஜய் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார்
அருண்விஜய் அடுத்ததாக பாக்ஸர் மற்றும் சினம் படங்களில் நடித்து வருகிறார். பாக்ஸர் படத்தில் உண்மையான பாக்ஸரான ரித்திகா சிங்கும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் குற்றம் 23 இயக்குனருடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அருண்விஜய்.
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
ஓட்டுப்போட வராத ஜோதிகா.. மும்பை போனதும் மொத்தமா மாறிவிட்டார்.. விளாசும் நெட்டிசன்ஸ்!