Don't Miss!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வருத்தம் தெரிவித்த 'அருவி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு... ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை : கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது 'அருவி' திரைப்படம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இன்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'அருவி' படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
பாராட்டுகள் ஒருபுறமிருக்க, 'அருவி' படத்தில் விஜய் படம் குறித்த காமெடிக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'விஜய் படத்துல நல்ல படமா அது என்ன' எனக் கேட்பது, 'குருவி' படத்தில் ஆக்ஸிலேட்டர் வொயரை விஜய் கடிப்பதை இமிடேட் செய்வது என சில காட்சிகள் வருகின்றன.
அதேபோல், அருவி படத்தில் இடம்பெறும் 'சொல்வதெல்லாம் சத்தியம்' ரியாலிட்டி ஷோ காட்சிகளும் சர்ச்சையாகியுள்ளன. அந்த ஷோவின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்னன் 'அருவி' படத்தில் தவறாகச் சித்தரித்தது குறித்து வருத்தப்பட்டுள்ளார்.
#அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! @thambiprabu89 @DreamWarriorpic
— S.R.Prabhu (@prabhu_sr) December 18, 2017
இந்நிலையில், 'அருவி' படத்தைத் தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ''அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!'' என ட்வீட் செய்து வருத்தம் தெரிவித்துள்ளார்.