Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரவிந்த் கெஜ்ரிவால் கவனம் ஈர்த்த தமிழ் ஆவணப்படம்!
Recommended Video
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தமிழ் ஆவணப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.
அந்தப் படம் கொலை விளையும் நிலம். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் படும் பாடுகளை, விவசாயம் பொய்த்ததால் அந்த மாவட்டங்களில் விவசாயிகள் தூக்கில் தொங்கியதையும் பூச்சி மருந்து குடித்து இறந்த அவலங்களையும் படம்பிடித்துள்ளது இந்த கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் ராஜிவ் காந்தியின் உருவாக்கம் இது.
கடந்த ஆண்டு உருவான இந்தப் படத்தை, இயக்குநர் சுப்பிரமணிய சிவாவின் மூலம் அறிந்து, பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கியது நினைவிருக்கலாம்.
இந்த ஆவணப்படத்தை நேற்று முறைப்படி சென்னையில் வெளியிட்டார் ராஜிவ் காந்தி. தமிழகத் தலைவர்கள் க திருநாவுக்கரசு, பாலபாரதி, செல்வப் பெருந்தகை, போராளி வளர்மதி, விவசாய சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில்.
இந்தப் படம் குறித்து தகவல் அறிந்து, அதை இணையதளத்தில் பார்த்துள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக விவசாயிகளின் தற்கொலைகளைச் சொல்லும் ஆவணப் படம் கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் க ராஜிவ் காந்தி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் நாட்டு விவசாயிகளின் இப்போதைய நிலையை தெளிவாகக் காட்டுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.