பாட்டாலே புத்தி சொன்னா...: இந்தி படத்திற்கு பாட்டெழுதிய கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாலிவுட் படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார்.
சமூக ஆர்வலர், ஆம் ஆத்மி கட்சி தலைவர், டெல்லி முதல்வர் என்று பன்முகம் கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அரசியலில் இருந்து சினிமாவுக்கு தாவி இருக்கிறார்.

நடிகர் ஆமீர் கானின் தம்பி ஹைதர் அலி கான் தில் தோ தீவானா ஹை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தீபக் ஷர்மா தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
மீதமுள்ள பாடல்களை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் எழுதியுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications