Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஏன் பார்க்கலைனு அரவிந்த்சாமி என் மீது கோபமாக உள்ளார்: மணிரத்னம்
சென்னை: நடிகர் அரவிந்த்சாமி தன் மீது கோபமாக இருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் நடிகர் ஆனவர் அரவிந்த்சாமி. மணிரத்னத்தின் ரோஜா படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
சில காலம் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த அரவிந்த் சாமி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
தனி ஒருவன்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக அசத்தல் வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
மணிரத்னம்
மணியின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் அரவிந்த்சாமி. அப்படி இருக்கும்போது அவர் நடித்த தனி ஒருவன் படத்தை இன்னும் மணி பார்க்கவில்லையாம்.
விரைவில்
தனி ஒருவன் ரிலீஸான போது அதை தியேட்டரில் பார்க்க முடியவில்லை. இதனால் அரவிந்த் சாமி இன்னும் என் மீது கோபமாக உள்ளார். சரியான நேரம் வரும்போது விரைவில் டிவிடியில் பார்க்க வேண்டும் என்கிறார் மணிரத்னம்.
தளபதி
கார்த்தி, அதிதி ராவ் ஹைதரியை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து தளபதி போன்று கேங்ஸ்டர் படத்தை இயக்குவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் மணி.