Don't Miss!
- News திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைப்பு.. பரபரக்கும் சேலம்.. என்ன நடந்தது?
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்!
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: சதுரங்க வேட்டை 2 பட சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் அப்படத் தயாரிப்பாளரான நடிகர் மனோபாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் சதுரங்க வேட்டை'. நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது தான் இப்படத்தின் கதை. நட்டி நாயகனாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனால், அப்படத்தின் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலாவே தயாரிக்க முடிவு செய்தார். இப்படத்தில் நாயகனாக அரவிந்த்சாமியும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்துள்ளனர்.
சம்பள பாக்கி:
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் மனோபாலா தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பட டப்பிங்கிற்கு அரவிந்த்சாமி செல்லாமல் இழுத்தடித்து வருவதாகத் தெரிகிறது.
விசாரணை:
இந்த சூழ்நிலையில், அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விளக்கம்:
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தள்ளி வைப்பு:
அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று குறித்து தெரிய வரும்.