Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி
தலைவி படத்தில் தலைவராக அரவிந்த் சாமி
Recommended Video
சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவி திரைப்படத்தில், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த் சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை படக்குழுவும் உறுதி செய்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதராசபட்டினம், தெய்வதிருமகள், தலைவா, சைவம், தேவி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே கங்கனா ரனாவத் தேர்வாகி உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எம்.ஜி.ஆராக நடிக்க போவதை படக்குழு உறுதி செய்துள்ளது. கடைசியாக அரவிந்த் சாமி மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார்.
அந்த திரைப்படத்திற்கு பின், இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திற்கு தேர்வாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் டபுள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் மும்மொழிகளில் எடுக்கப்படுவதாலும், படத்திற்கு பெரிய நடிகர்கள் தேவை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் படத்தில் அரவிந்த் சாமி இணைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் சாமி சிறந்த நடிகர் என்பதோடு நில்லாமல், அவர் காரணம் இல்லாமல் எந்த படத்தையும் தேர்வு செய்வதில்லை. அரவிந்த் சாமி கதைகளில் அதிக கவனம் செலுத்துவார். அதே நேரத்தில் விஜய் அடிப்படையில் ஒரு விளம்பரப்பட இயக்குனர். அதனால் அவர் கதையை காட்டிலும் ஒரு படத்தின் மேக்கிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
அதனாலே அவரின் கடைசி இரு படங்களான தேவி 2, லஷ்மி தோல்வி அடைந்தது. தற்போது இவர்கள் இணைந்து பணியாற்றுவது கட்டாயம் புது முயற்சியாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்