பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாய் கிழிய கூறியது விலங்குகள் நல அமைப்பான பீட்டா.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நம்ம ஊர் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை ட்விட்டரில் வெளியிட்டு அதன் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
இது தான் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பது.


Click it and Unblock the Notifications











