இருட்டு அறை முரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த்சாமி... எதையோ தேடப்போகிறாராம் ஹீரோ!
நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம் தான் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்கள் சரவணன்,யு.ஆர். ஜமீல், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சக்திவேலன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் படம் இது. கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

துப்பறிவு திரில்லர் படமான இதில், அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











