Don't Miss!
- News திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைப்பு.. பரபரக்கும் சேலம்.. என்ன நடந்தது?
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இருட்டு அறை முரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த்சாமி... எதையோ தேடப்போகிறாராம் ஹீரோ!
நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம் தான் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்கள் சரவணன்,யு.ஆர். ஜமீல், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சக்திவேலன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினியையே "வாவ்" சொல்ல வைத்த யோகிபாபு.. எதற்காக தெரியுமா?
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் படம் இது. கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துப்பறிவு திரில்லர் படமான இதில், அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது.