Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பின்னாடியே இப்படி இருக்குன்னா.. முன்னாடி மிரட்டுமே.. நாளைக்கு ’ஆர்யா 30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்யாவின் 30வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து #Arya30 என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
காங்கிரஸில் இருந்து விலகியவர்.. உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார் பிரபல நடிகை!
ஆர்யா 30
2005ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து அதே ஆண்டில், உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை என வரிசையாக அவரது படங்கள் வெளியாகின. அறிமுகப்படத்திலேயே தென்னிந்தியாவின் சிறந்த அறிமுக நடிகர் விருதை வென்ற நடிகர் ஆர்யா, இப்போ தனது 30 படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளார்.
மிரட்டல் நடிப்பு
நடிகர் ஆர்யாவால் சாக்லெட் பாயாகவும் நடிக்க முடியும், மெத்தட் ஆக்டராகவும் மாற முடியும். நடிப்புக்கு சவால் விடும் ஏகப்பட்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளவர் ஆர்யா. பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள், அவன் இவன், சமீபத்தில் வெளியான மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் ஆர்யாவின் வேற லெவல் ஆக்டிங்கை தமிழ் சினிமா கண்டு ரசித்துள்ளது.
டெடிக்கு வெயிட்டிங்
ஜாலியா டெடி என்கிற ஒரு படத்தை இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. ஹாலிவுட் படங்களை குறைந்த பட்ஜெட்டில் தமிழ் மொழியிலும் வித்தியாசமாக கதை சொல்லி எடுக்க முடியும் என்பதை, டிக் டிக் டிக், மிருதன், என தொடர்ந்து சொல்லி வரும் சக்தி சவுந்தர்ராஜனின் டெடிக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.
பா. ரஞ்சித் இயக்கத்தில்
இந்நிலையில், நடிகர் ஆர்யா இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் பாக்ஸிங் கதையை மையமாக கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. அதன் அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
ஃபர்ஸ்ட் ரவுண்ட்
இறுதிச்சுற்று என சுதா கொங்கரா மாதவன், ரித்திகா சிங்கை வைத்து படம் எடுத்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, ஃபர்ஸ்ட் ரவுண்ட் என கேப்ஷன் போட்டு பா. ரஞ்சித் ஆர்யாவின் 30வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் #Arya30 என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பின்னாடியே இப்படின்னா
சல்பேட்டா, சல்பேட்டா பரம்பரை என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏகப்பட்ட தகவல்கள் முன்னதாக வெளியாகி உள்ளன. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் நாளை வெளியாகும். இந்த படத்திற்காக முரட்டுத் தனமான உடற்கட்டுக்கு ஆர்யா மாறிய ஜிம் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி வைரலாகின. இந்நிலையில், பின்னாடி திரும்பி நின்றபடி ஆர்யா இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பின்னாடியே இப்படி இருக்குன்னா, முன்னாடி எப்படி இருக்கும் என மிரண்டு போயுள்ளனர்.